×

இந்தியன்-2 விபத்து நடந்த இடத்தில் இயக்குநர் சங்கர் உள்பட 23 பேரிடம் விசாரணை

சென்னை: இந்தியன்-2 பட விபத்து நடந்த இடத்தில், இயக்குநர் சங்கர் உள்பட 23 பேரிடம் விசாரணை நடத்தினர். பூந்தமல்லியை  அடுத்த  செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன்-2 திரைப்படத்தின்  படப்பிடிப்பு நடந்து வந்தது. இதற்காக, பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு  காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது. கடந்த மாதம் 19ம் தேதி படப்பிடிப்பின்போது  ராட்சத கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் உதவி இயக்குனர் உட்பட 3 பேர் பலியானார்கள். இதில், 10க்கும் மேற்பட்டோர் பேர் காயம் அடைந்தார்கள். இது குறித்து நசரத்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

பின்னர், இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது. இயக்குனர் சங்கர் உள்ளிட்ட 23 பேர் நேற்று விபத்து நடந்த படப்பிடிப்பு தளத்திற்கு  வந்து ஆஜரானார்கள். விபத்து எப்படி நடந்தது, விபத்து நடக்கும்போது யார் யார் எங்கு இருந்தார்கள், கிரேன் எப்படி சாய்ந்தது என பல்வேறு கேள்விகள்  இயக்குனர் சங்கர் மற்றும் படக்குழுவினரிடம் கேட்கப்பட்டது. அதேபோல் சம்பவம் நடந்த இடத்தில் நடித்தும் காட்டினார்கள். இதனை போலீசார் வீடியோ  பதிவு செய்தனர். இந்த வீடியோ பதிவுகள் அனைத்தும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விசாரணை  முடிந்து இயக்குனர் சங்கர் வேறு ஒரு காரில் யாருக்கும் தெரியாமல் சென்று விட்டார்.

Tags : Investigation ,persons ,Director Shankar ,accident ,scene ,Indian ,Indian-2 , Indian-2, Accident, Director Shankar, Investigation
× RELATED சென்னையில் ரயில் பயணிகளிடம் தொடர் திருட்டு: 2 பேர் மீது குண்டாஸ்